Tamil News
Home செய்திகள் IMFஇன் ஊழியர்களுடனான ஒப்பந்தத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்க முடியாது: சபாநாயகர்

IMFஇன் ஊழியர்களுடனான ஒப்பந்தத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்க முடியாது: சபாநாயகர்

சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) இலங்கை செய்து கொண்ட ஊழியர்கள் மட்ட ஒப்பந்தத்தில் வரிகள் தொடர்பான சில முக்கிய விடயங்கள் உள்ளதால் அது தொடர்பான விபரங்களை பாராளுமன்றத்திற்கு வழங்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை செய்து கொண்ட ஊழியர்கள் மட்ட ஒப்பந்தம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி விவாதத்திற்கு அழைப்பு விடுக்க உள்ளதாகவும் எனவே அந்த அறிக்கையை சபையில் சமர்ப்பிக்குமாறும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா  லக்ஷ்மன் கிரியெல்ல இன்று (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றில் தெரிவித்தார்.

அவரின் கருத்துக்கு பதில் வழங்கும்போதே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Exit mobile version