இலங்கை பாராளுமன்ற சுற்று வட்டாரத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் படுகிறது.
அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக இவ்வாறு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல் துறையினரின் வீதித் தடையை மீறி பாராளுமன்ற பாதையின் ஊடாக முன்னோக்கிச் செல்ல முயற்சித்த போது குறித்த பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.