கொழும்பில் பதற்றம்: இலங்கை துறைமுக அதிகார சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Gallery

இலங்கை துறைமுக அதிகார சபை ஊழியர்களால் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கை துறைமுக அதிகார சபைக்கு முன்பாக தற்போது (30.01.2023) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தை எதிர்த்தும், நாட்டில் காணப்படுகின்ற பொருளாதார நெருக்கடி குறித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் அரசாங்கத்தின் வரிக்கொள்கைக்கு எதிராகவும் இந்த ஆர்ப்பாட்டம்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஆர்ப்பாட்டத்தின் போது பெருமளவிலான  காவல்துறையினர் கடமைகளுக்காக ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.