Tamil News
Home செய்திகள் மட்டக்களப்பு-எரிபொருள் கோரி அதிபர், ஆசிரியர்கள் வீதி மறியல் பேரணி

மட்டக்களப்பு-எரிபொருள் கோரி அதிபர், ஆசிரியர்கள் வீதி மறியல் பேரணி

ஆசிரியர்கள் வீதி மறியல் பேரணி: மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடி கோட்ட பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் எரிபொருள் வழங்கக் கோரி இன்று ஓட்டமாவடி மணிக்கூட்டு கோபுர சந்தியில் போராட்டம்  ஒன்றை முன்னெடுத்தனர்.

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையிலும், கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை வழமை போன்று இயங்குமாறு மாகாணப் பணிப்பாளர் அறிவித்த நிலையில் பாடசாலைக்கு செல்வதற்கு அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எரிபொருள் இன்மையால் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலைமை காணப்பட்டு வருகின்றது.

ஓட்டமாவடி கோட்டத்தில் 27 பாடசாலைகளில் ஏழு பாடசாலைகள் கஷ்டப் பிரதேசத்திலுள்ள பாடசாலைகள் தூர இடங்களில் உள்ள நிலையில் இங்கிருந்து செல்லும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் போக்குவரத்து பிரச்சனை காரணமாக பாடசாலை வருகை குறைவாகவே காணப்படுகின்றது. இதனால் தங்களுக்கு உரிய எரிபொருளிளை வழங்கக் கோரி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Exit mobile version