கறுப்பு ஜூலையை முன்னிட்டு, பிரித்தானியாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்.
கறுப்பு ஜூலை நினைவு தினமான இன்று பிரித்தானியா வாழ் தமிழர்கள் அந்நாட்டுப் பிரதமர் மாளிகையான டவுனிங் ஸ்ட்ரீட் முன்பாக ஒன்றுகூடி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கறுப்பு ஜூலை வன்முறை நாளின் 38 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்தக் கவனயீா்ப்பு முன்னெடுக்கப்பட்டது.
சிறீலங்கா இனவாத அரசின் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பியதுடன், தமிழ் தாயகத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட ஆக்கிரமிப்புக்களை நிறுத்துமாறு வலியுறுத்தினர்.