Tamil News
Home செய்திகள் தமிழரசுக் கட்சி போலி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது- குருசாமி சுரேந்திரன்

தமிழரசுக் கட்சி போலி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது- குருசாமி சுரேந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற இலங்கை தமிழரசு கட்சி போலி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறதாக ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று  நடந்த செய்தியாளர் சந்திப்பில்  அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தமிழரசு கட்சி பிரிந்து தனித்து போட்டியிடுவதாக முடிவெடுத்த பின்னர் தற்போது மக்களிடையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சிகள் தான் தமிழரசு கட்சியை வெளியேற்றியதாக மக்களிடையே பொய்யான கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

தனிக்கட்சி தாங்கள்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று மக்களிடையே பரப்புரைகளை மேற்கொண்டு வரும் செயல்பாடு மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது ஐந்து கட்சிகள் சேர்ந்த ஒரு கூட்டமைப்புதான். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவிர ஒரு தனி கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இல்லை.

எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளை உள்வாங்கி ஒரு பலமான இயக்கமாக செயல்படும் என அவர்  தெரிவித்துள்ளார்.

Exit mobile version