Tamil News
Home செய்திகள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களையும் படகுகளை விடுவிக்கக் கோரி தமிழக மீனவர்கள் போராட்டம்

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களையும் படகுகளை விடுவிக்கக் கோரி தமிழக மீனவர்கள் போராட்டம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய கோரியும், பறிமுதல் செய்த படகுகளை விற்பனை செய்வதை கண்டித்து ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.  

இராமேஸ்வரத்தில் இருந்து கடந்த மார்ச் மாதம் 23 ம் திகதி மீன்பிடிக்க சென்ற 12 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, இலங்கை கடற்படை கைது செய்தது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும். விடுதலை செய்யப்பட்டு, தாயகம் அனுப்பப்படாத மண்டபம் மீனவர்கள் 4 பேரையும் உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை இலங்கை மீன்பிடித் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, விசைப் படகுகளை உடனடியாக திரும்பத் தர வேண்டும்.என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,  இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை கடற்படையால் அரசுடமையாக்கப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான மீன்பிடி விசைப் படகுகளை, இலங்கையில் ஏற்பட்டள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றத்தால், அந்தப் படகுகளில் இருந்து எடுக்கப்பட்ட மரப்பலகைகளை விறகுக்காக விற்பனை செய்வது வேதனை அளிக்கிறது என்றும் மீனவர்களினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, கடந்த 4 ஆண்டுகளாக இலங்கை அரசால் தடுத்து வைக்கபட்டுள்ள, படகுகளை உடனடியாக தமிழ்நாட்டு மீனவர்களிடம் ஒப்படைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆர்பாட்டத்தில் பங்கேற்ற மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Exit mobile version