Tamil News
Home செய்திகள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்குமாறு தமிழக முதல்வர் கோரிக்கை

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்குமாறு தமிழக முதல்வர் கோரிக்கை

இலங்கையுடன் தகுந்த தூதரக வழிவகைகளை மேற்கொண்டு இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடி படகுகளை விரைவில் விடுவிக்க மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில், கடந்த 9 மாதங்களில் இலங்கையால் கைது செய்யப்பட்ட 150 தமிழக மீனவர்களை விடுவிக்க ராஜதந்திர வழிகள் மூலம் ஆதரவு அளித்ததற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

“செப்டெம்பர் 6 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் 12 இந்திய மீனவர்கள் புதுச்சேரியைச் சேர்ந்த இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுடன் கைது செய்யப்பட்டதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருவதற்காக இது உள்ளது. அவர்களில் 5 பேர் தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்” என அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி, 23 மீனவர்களும், தமிழக மீனவர்களின் 95 விசைப்படகுகளும் இன்னும் இலங்கை தடுப்பில் இருப்பதாகவும், மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அமைச்சரிடம் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version