அவுஸ்திரேலியாவில் மெல்பேன் தடுப்பு முகாமில் உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்றை தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் மேற்கொண்டு வருகின்றார்.
சங்கர் கணேஷ் என்ற தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் மெல்பேன் குடிவரவு தடுப்பு முகாமில் கடந்த இரண்டு வருடங்களாக தடுத்து வைக்கப் பட்டிருக்கிறார்.
புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப் பட்டுள்ள பின்னணியில் நாடு கடத்தலை எதிர் கொண்டுள்ள இவர், கடந்த வாரம் திங்கட்கிழமை முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப் படுகிறது.