Tamil News
Home செய்திகள் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவின் பொறுப்பிலிருந்த சந்தேகநபர் உயிரிழப்பு தொடர்பில் விசாரணை

போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவின் பொறுப்பிலிருந்த சந்தேகநபர் உயிரிழப்பு தொடர்பில் விசாரணை

காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவின் பொறுப்பிலிருந்த போது சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள், காவல்துறை மா அதிபரினால் காவல்துறை தலைமையகத்தின் விசேட விசாரணைப் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளன.

கிடைத்த தகவலுக்கமைய நாரஹேன்பிட்டி தொழிற்பயிற்சி அதிகார சபையின் ஊழியர் ஒருவர், காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினால் அண்மையில் கைது செய்யப்பட்டார்.

அன்றைய தினம் இரவு இடம்பெற்ற ஏதேனுமொரு சம்பவத்தின் பின்னர் குறித்த நபர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாக காவல்துறையினரால் தெரிவித்தனர்.

காவல்துறையினரின் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக, உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version