22ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவு- எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு

நிபந்தனைகளுடன் நாட்டின் எதிர்காலம் தொடர்பில் சிந்தித்து 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் மீதான விவாதம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

இதேவேளை, பயங்கரவாத தடைச்சட்டத்தின்(PTA) கீழ் கைது செய்யப்பட்டுள்ள வசந்த முதலிகே, கல்வெவ சிறிதர்ம தேரர் ஆகியோரை விடுவிக்குமாறும் எதிர்க்கட்சி தலைவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.