Home செய்திகள் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கோரி திருகோணமலையில் போராட்டம்

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கோரி திருகோணமலையில் போராட்டம்

திருகோணமலையில் போராட்டம்

திருகோணமலையில் போராட்டம்

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கோரியும் அரசாங்கத்தை பதவி விலக கோரியும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் இன்று (12)   முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டம் கண்டி திருகோணமலை பிரதான வீதியின் முள்ளிப்பொத்தானை 96 ம் சந்தியில் இடம் பெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்தினை சமூக நல குழு இணைந்து முன்னெடுத்திருந்தது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் பௌத்த துறவி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் “Go Home Goata“,  போன்ற கோசங்களை எழுப்பினர்.

இதன் பின் ஊடகங்களுக்கு  போராட்டக்காரர்கள் தரப்பில் கருத்து தெரிவிக்கையில், “நாட்டை அதாளபாதாளத்திற்கு கொண்டு செல்லாமல் அதிகாரத்தை கொடுத்து விட்டு வீட்டுக்கு செல்லுங்கள். தற்போதைய பொருளாதார நெருக்கடிகளை மக்கள் தாங்கிக் கொள்ள முடியாமல் பல்வேறு துன்பங்களை அனுபவிக்கின்றனர். எரிபொருள் பிரச்சினை, மின்வெட்டு என பல சிக்கல்களை  அனுபவித்து வருகின்றனர் என்றனர்.

அதே நேரம்,“சிங்கள பௌத்தத்தின் ஆணையின் மீதுகைவைக்காதே“ என்ற கோசத்துடன் பௌத்த மதகுருமார்களும் சமூக ஊடக செயற்பாட்டாளர்களும் கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version