மீண்டும் போராட்டம்- இலங்கை ஆசிரியர் சங்கம்  தீர்மானம்

ABC stalin மீண்டும் போராட்டம்- இலங்கை ஆசிரியர் சங்கம்  தீர்மானம்

நாடு முழுவதிலும் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கலந்து கொண்டு பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை வரும் 22 ஆம் திகதி முன்னெடுக்க வுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம்  அறிவித்துள்ளது.

தற்போது, ஆசிரியர் சேவை சங்கம் இணையக் கற்பித்தல் செயற்பாடுகளிலிருந்து விலகி முன்னெடுத்துள்ள வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தைத் தவிர மேலும் ஒரு ஆர்ப்பாட்டத்தை எதிர் வரும் 22 ஆம் திகதி நாடு முழுவதிலும் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கலந்து கொண்டு முன்னெடுக்க வுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

பல கோரிக்கைகளை முன் வைத்து 14 ஆசிரியர் சங்கங்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த வுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது.

தங்களது கோரிக்கைகளுக்கு இதுவரை நியாயமான பதில் கிடைக்காததால் தொழிற் சங்க நடவடிக்கையை மேலும் விரிவு படுத்தத் தீர்மானித் துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இன்றைய தினம் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

ilakku Weekly Epaper 138 July 11 2021 e1626027838912 மீண்டும் போராட்டம்- இலங்கை ஆசிரியர் சங்கம்  தீர்மானம்