கடந்த ஜூலை 17ம் தேதியுடன் கெவின் ரூட் தலைமையிலான அவுஸ்திரேலிய அரசு படகு வழியாக வரும் அகதிகளை தடை செய்யும் முடிவினை அறிவித்து எட்டு ஆண்டுகள் கடந்துள்ளன.
அவுஸ்திரேலிய அரசு தொடர்ந்து கடைப்பிடிக்கும் இந்த அகதிகள் கொள்கையை கைவிடக் கோரி மெல்பேர்ன் நகரில் ஜூலை 17 அன்று 50 மேற்பட்டோர் போராட்டம் நடத்தியிருக்கின்றனர்.
இந்த அகதிகள் கொள்கையின் காரணமாக பல நூறு அகதிகள் சுமார் எட்டு ஆண்டுகளாக சிறைப்படுத்தப் பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.