காணி சுவீகரிப்பை நிறுத்தி விவசாய செய்கைக்காக நிலங்களை பெற்றுத் தாருங்கள் -மக்கள் போராட்டம்

விவசாய செய்கைக்காக நிலங்களை பெற்றுத் தாருங்கள்

விவசாய செய்கைக்காக நிலங்களை பெற்றுத் தாருங்கள்

திருகோணமலை மாவட்டம், கோமரங்கடவெல பிரதேச செயலகத்துக்கு முன்பாக காணி சுவீகரிப்பதை நிறுத்தி சொந்த காணிகளை பெற்றுத் தருமாறு இன்று  ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றது.

யுத்த காலத்தின் போது தங்களது விவசாய காணிகளை  விட்டு வெளியேறி இருந்த நிலையில், தற்போது வனஜீவராசிகள் திணைக்களத்தினர் அதனை அடாத்தாக சுவீகரித்துள்ளனர்.

எனவே இதனை தடுத்தி நிறுத்தி எமது சொந்த காணிகளை பெற்றுத் தாருங்கள் இதன் ஊடாக விவசாய செய்கையை மேற்கொள்ளவுள்ளோம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  கோமரங்கடவெல பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

வனஜீவராசி திணைக்களத்தினர் பயிர் செய்கைகளை செய்ய விடாதும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடாத வண்ணமும் தடுத்துள்ளனர். இதனால் அன்றாட ஜீவனோபாய தொழிலான விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கின்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கோமரங்கடவெல பிரதேச செயலாளர் டி.எம்.எஸ்.திசாநாயக்க கலந்துரையாடி தீர்வினை பெற்றுத் தருவதாக கூறியுள்ளார்.