தமிழ்நாடு: மானாமதுரையில் குடிநீரின்றித் தவிக்கும் இலங்கை அகதிகள்

குடிநீரின்றித் தவிக்கும் இலங்கை அகதிகள்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை இலங்கை அகதிகள் முகாமில் நல்ல குடிநீரின்றித் தவிக்கும் இலங்கை அகதிகள் குடிநீருக்கு அவதிப்பட்டு வருகின்றனர்.

இங்குள்ள குழாயில் வரும் சுண்ணாம்பு படியும் தண்ணீரைக் குடித்து பலர் கிட்னி பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக புகார் கூறப்படுகிறது.

மானாமதுரையில் மாங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட மூங்கில் ஊருணி பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 180 குடும்பங்களைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021