தமிழக மீனவர்கள் மீது மீண்டும் இலங்கை கடற்படை தாக்குதல்

fishermen 1574149624 தமிழக மீனவர்கள் மீது மீண்டும் இலங்கை கடற்படை தாக்குதல்

தமிழக மீனவர்கள் மீது சமீப காலமாக நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி வருவது அதிகரித்து வருகிறது.

இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம் கடலோர பகுதியில் இருந்து நேற்று காலை 200-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனது.

இவர்கள் வழக்கம்போல் கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அந்த வழியாக 20-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் படகில் ரோந்து பணியில் வந்த இலங்கை கடற்படையினர்,  மீனவர்கள் மீது, மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். மேலும் மீனவர்களின் மீன்பிடி வலைகளை  சேதப்படுத்தி அங்கிருந்து விரட்டியுள்ளனர்.

இதன் காரணமாக 50-க்கும் மேற்பட்ட படகுகளுக்கு தலா ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. ஒரு இலட்சம் வரை மீன்பிடி வலைகள் மற்றும் சாதனங்கள் சேதமடைந்ததாகவும், இதனால் பல இலட்ச ரூபாய் தங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட  மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

ilakku-weekly-epaper-141-august-01-2021