இலங்கை அகதிகள் முகாம் இனி ‘மறுவாழ்வு முகாம்’ என அழைக்கப்படும்-  தமிழக முதலமைச்சர் அறிவிப்பு

இலங்கை அகதிகள் முகாம் இனி மறுவாழ்வு முகாம் இலங்கை அகதிகள் முகாம் இனி மறுவாழ்வு முகாம்: தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் அகதிகள் அல்ல என சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.

தமிழக சட்ட சபையில்  இலங்கை அகதிகள் முகாம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவிக்கையில்,

தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் அகதிகள் அல்ல. அவர்களுக்கு துணையாக நாங்கள் இருக்கிறோம். அந்த உணர்வோடு இலங்கை அகதிகள் முகாம் இனி “இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்” என அழைக்கப்படும் என்று அரசு ஆணையிட்டு இருக்கிறது” என்றார்.

ilakku-weekly-epaper-144-august-22-2021