பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான ஆர்வத்தை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்தவில்லை- மனித உரிமை ஆணையாளர்

பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான ஆர்வத்தை

பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான ஆர்வத்தை  இலங்கை அரசாங்கம் தனக்குள்ள விருப்பத்தை வெளிப்படுத்தவில்லை என தெரிவித்துள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பச்செலெட், பொறுப்புக்கூறலை முன்னகர்த்துவதற்கு அவசியமான சர்வதேச மூலோபாயங்களை மனித உரிமை பேரவை முன்னெடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் பொறுப்புக்கூறல் தொடர்பில் தனது விருப்பமின்மையை வெளிப்படுத்தியுள்ளதுடன் யுத்த குற்றங்களில் ஈடுபட்டனர் என குற்றம்சாட்டப்பட்ட மூலம் அதிகாரிகளை அரசாங்கத்திற்குள் உள்வாங்கியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.