இலங்கை மீனவர்கள் அறுவர் இந்தியாவில் கைது

இலங்கை மீனவர்கள் அறுவர் படகு ஒன்றுடன் நேற்றையதினம் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இலங்கை எல்லையை தாண்டி இந்திய எல்லைக்குள் சென்றமையால் அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இன்று (20) பி.ப 2 மணியளவில் தாருவைகுளம் பகுதிக்கு கொண்டு செல்லப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.