இராணுவத் தளபதி பதவி மூலம் அமைதி காக்கும் பணியை இழந்த சிறிலங்கா இராணுவம்

இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்ட நிலையில் சிறிலங்கா இராணுவம் தனது சர்வதேச அமைதி காக்கும் பணிகளை இழக்கும் அபாயத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது லெபனான், மாலி மற்றும் தென்சூடானில் அமைதி காக்கும் பணிகளில் சுமார் 415 சிறிலங்கா இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அதிக சம்பளத்திலேயே இந்தப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

பல சக்தி வாய்ந்த நாடுகளும் ஜெனீவா மனித உரிமை ஆணையாளரும் ஷவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்துள்ளதை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். எனினும் இராணுவத் தளபதியை நியமிப்பது சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரம் எனத் தெரிவித்து அரசாங்கம் அவர்களின் எதிர்ப்பை நிராகரித்தது.

அரசாங்கத்தின் இந்த பதிலை அடுத்து ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் சிறிலங்கா இராணுவம் தொடர்ந்தும் தனது அமைதி காக்கும் நிலையை பேண வேண்டுமா என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் வடக்கு நோக்கி நகரும் சீனாவின் பிரசன்னம்: யாரைப் பாதிக்கும்?