ஜனாதிபதி பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
கொழும்பு, சத்தம் வீதியில் காவல்துறையினரின் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் கைப்பற்றியதையடுத்து காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இந்நிலையில்,அனைத்து தடைகளையும் உடைத்து, போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையின் வாயிலை அடைந்துள்ளனர்.
சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அங்கு கூடியுள்ள நிலையில், கடற்படையினர் போராட்டக்குழுவினரை அடக்க தயார் நிலையில் உள்ளைமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப்புகை தாக்குதலில் 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.