இலங்கை-‘மக்கள் போராட்ட பிரஜைகள்’ கட்சி; போராட்டக்காரர்கள் தொடங்கும் புதிய கட்சி

‘மக்கள் போராட்ட பிரஜைகள்’ என்ற புதிய அரசியல் கட்சியை பதிவு செய்வதற்கான ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கட்சி சார்பற்ற செயற்பாட்டாளர்கள் சமர்ப்பித்துள்ளனர்.

தேர்தல் ஆணையத்துக்கு இன்று திங்கட்கிழமை சென்று அதன் தலைவரிடம் ஆவணங்களை ஒப்படைத்துள்ளதாக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அடுத்து வரப்போகும் தேர்தல்களில் இவர்கள் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.