Home செய்திகள் ஐ. நா.வின் அதீத தலையீட்டை இலங்கை ஒருபோதும் ஏற்காது; 17 நாடுகளின் தூதுவர்களிடம் பீரிஸ்

ஐ. நா.வின் அதீத தலையீட்டை இலங்கை ஒருபோதும் ஏற்காது; 17 நாடுகளின் தூதுவர்களிடம் பீரிஸ்

இலங்கை ஒருபோதும் ஏற்காது
ஐக்கிய நாடுகள் சபையுடன் இலங்கை சுமூகமான முறையில் இணைந்து செயல்படும் எனத் தெரிவித்திருக்கும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரி யர் ஜீ. எல். பீரிஸ், நாட்டின் உள்விவகாரங்களில் ஐ.நாவின் அதீத தலையீட்டை இலங்கை ஒருபோதும் ஏற்காது, எதிர்க்கும் என்றும் கூறியுள்ளார்.

தகவல்களை சேகரிப்பதற்காகவென விசேட பொறிமுறை ஒன்றை அமைப் பதற்காக ஐ. நா. முன்னெடுக்கும் முயற்சி களை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த அவர், இலங்கைக்கு எதிராகப் பயன்படுத்துவதற்காகவே இவ்வாறு தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன எனவும் குற்றம்சாட்டினார்.

அந்தத் தகவல்கள் என்ன என்பதை அறிந்துகொள்வதற்கான வழிகள் எதுவும் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், இவ் வாறு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக் களிலுள்ள உண்மையை அறிந்துகொள் வதற்கான வாய்ப்புக்களும் இல்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

புதிதாக நியமிக்கப்பட்ட 17 நாடு களின் தூதுவர்களை நேற்றைய தினம் சந்தித்த போதே அமைச்சர் பீரிஸ் இத னைத் தெரிவித்தார். குறிப்பிட்ட தூதுவர்கள் நேற்று முன்தினம் ஜனாதிபதியி டம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கொடுத்து பதவியேற்றுக்கொண்டனர்.

இந்த தூதுவர்களை வரவேற்ற அமைச் சர் பீரிஸ், இந்த நாடுகள் ஒவ்வொன்றுட னும் நெருக்கமான உறவுகளைப் பேண அரசாங்கம் விரும்புகின்றது எனத் தெரிவித்தார். இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக தூதுவர்களுக்கு விளக்கமளித்த அமைச்சர், கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்புக்களையும், தடுப் பூசி வழங்குவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாகவும் விளக்கமளித்தார்.

இலங்கை அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் செய லகம், விசாரணை ஆணைக்குழுக்கள், மனித உரிமைகள் ஆணைக்குழு போன் றனவற்றின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கமளித்த அமைச்சர், ஐ. நாவுடன் சுமூகமான முறையில் இணைக்கமாகச் செயல்படுவதற்கே அரசாங்கம் விரும்புவ தாகவும், அதிகமான தலையீடுகளை ஏற்க முடியாது எனவும் தெரிவித்தார்.

Exit mobile version