Tamil News
Home செய்திகள்  இலங்கை சீன முதலீடுகளில் முட்டாள்தனமான பந்தயம் கட்டியது- சிஐஏ தலைவர்

 இலங்கை சீன முதலீடுகளில் முட்டாள்தனமான பந்தயம் கட்டியது- சிஐஏ தலைவர்

இலங்கை சீன முதலீடுகளில் முட்டாள்தனமான பந்தயம் கட்டியது என அமெரிக்காவின் சிஐஏ தலைவர் பில்பேர்ன்ஸ், அஸ்பென் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்ட போது இவ்வாறு  கருத்து  தெரிவித்துள்ளார்.

தென்னாசிய நாடான இலங்கை சீனாவின் முதலீடுகள் மீது முட்டாள்தனமான பந்தயம் கட்டியதே இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை தலைவர்கள் மேற்கொண்ட சீனாவின் உயர் கடன் முதலீடுகளே தென்னாசியா நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்கு காரணம் என்றும் அவர் கூறியுளளார்.

Exit mobile version