யாழ்ப்பாண மின்சக்தி திட்டத்தை இந்தியாவுக்கு வழங்கியது இலங்கை

யாழ்ப்பாண மின்சக்தி திட்டம் இந்தியாவுக்கு

இந்தியாவும் இலங்கையும் யாழ்ப்பாணத்தில் மின்சக்தி திட்டமொன்றை ஆரம்பிப்பது தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.

வடக்கின் தீவுப்பகுதிகளில் சீனாவிற்கு முன்னர் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டிருந்த மின்சக்தி திட்டங்களையே இலங்கை இந்தியாவிற்கு வழங்கியது.

இந்த திட்டத்தை முதலில் சீனாவின் எம்எஸ் சினோசர் எடெச்வின் நிறுவனத்திற்கு இலங்கை வழங்கியது எனினும் இந்தியாவின் எதிர்ப்பு காரணமாக அதனை பின்னர் கைவிட்டது.

இந்நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சரும் இலங்கை வெளிவிவகார அமைச்சரும் இது தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

Tamil News