Home செய்திகள் கொரோனா வைரஸ் காரணமாக இலங்கை பல சவால்களை எதிர்கொள்ளும்-ஐ.நா 

கொரோனா வைரஸ் காரணமாக இலங்கை பல சவால்களை எதிர்கொள்ளும்-ஐ.நா 

இலங்கை பல சவால்களை

கொரோனா வைரஸ் காரணமாக இலங்கை பல சவால்களை இந்த வருடம் எதிர்கொள்ளும் என ஐ.நா  கூறியுள்ளது.

ஐநாவின்  2022 உலக பொருளாதார நிலை மற்றும் வாய்ப்புகள் குறித்த அறிக்கையிலேயே இலங்கை குறித்து இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை உணவுப்பற்றாக்குறை அந்நியசெலாவணி நெருக்கடி கடன் ஆபத்துக்கள் போன்றவற்றை எதிர்கொள்ளும் என்றும் ஒன்றுடன் ஒன்று கலந்த பல பிரச்சினைகள் உலகின் பொருளாதார வளர்ச்சி வேகத்தை குறைக்கின்றன எனவும் தெரிவித்துள்ளது.

2022 இல் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.6 ஆக காணப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ஐ.நாவின் அறிக்கையில்,    இலங்கையின் முக்கிய சவால்களாக உணவுதட்டுப்பாடு வெளிநாட்டு நாணய கையிருப்பு குறைதல் மற்றும் கடன் ஆகியன காணப்படும்  என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version