இரண்டு வெளிநாட்டு வங்கிகளிடமிருந்து இலங்கை 7 பில்லியன் டொலர் கடனைப் பெற உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இந்த கடனுதவி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு தற்காலிகமாக இயலாமையால் இலங்கைக்கு வெளிநாட்டுக் கடன்களைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஒப்புதலைத் தொடர்ந்து இது தொடர்பான நம்பிக்கை மீளமைக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.