சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுப்பது தொடர்பில் இலங்கையும் அவுஸ்திரேலியாவும் கலந்துரையாடல்

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அவுஸ்திரேலியாவின் உதவி வெளிவிவகார அமைச்சர் கிம் வாட்ஸுடன் கலந்துரையாடியுள்ளார்.

23 உறுப்பினர்களைக் கொண்ட இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கத்தின் (IORA) அமைச்சர்கள் குழுவின் 22ஆவது கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இரு அமைச்சர்களும் வங்காளதேசத்தின் டாக்காவில் உள்ளனர்.

இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள், பொருளாதார அபிவிருத்தி,கடல்சார் மற்றும் சுற்றுலா துறைகளின் வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் குறித்து கலந்துரையாடியதாக அமைச்சர் சப்ரி தெரிவித்தார்.

இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான சட்டவிரோத குடியேற்றம் மற்றும் இருதரப்பு நலன்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் அவுஸ்திரேலிய அதிகாரிகளுடன் இணைந்து செயற்படுவது தொடர்பிலும் அவர்கள் கலந்துரையாடியுள்ளனர்.