மீண்டும் 202 பில்லியன் ரூபாய்களை அச்சிட்டது இலங்கை

202 பில்லியன் ரூபாய்களை அச்சிட்

மிகப்பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை அரசு, வாங்கிய கடன்களுக்கான மீள் செலுத்தும் தொகையை செலுத்தவும், உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யவும் கடந்த டிசம்பர் மாதம் 29 நாள் மீண்டும் 202 பில்லியன் ரூபாய்களை அச்சிட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதத்திற்கு பின்னர் இலங்கை அரசு கடந்த வருட இறுதியில் பெருந்தொகை பணத்தை அச்சிட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 130 பில்லியன் ரூபாய்களும், ஜுலை மாதம் 213 பில்லியன் ரூபாய்களும் அச்சடிக்கப்பட்டிருந்தன. கடந்த வருடம் இலங்கை அரசு மொத்தமாக 825 பில்லியன் ரூபாய்களை (ஏறத்தாழ 4 பில்லியன் டொலர்கள்) அச்சிட்டுள்ளது.

இலங்கை அரசின் இந்த நடவடிக்கை அதன் பொருளாதாரத்தில் நீண்டகால பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதுடன், இலங்கை அரசு முழுமையான பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் நிலையும் ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.