417 சிறைக்கைதிகளுக்கு விசேட அரச பொது மன்னிப்பு

சர்வதேச சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு 417 சிறைக்கைதிகளுக்கு விசேட அரச பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அபராதத் தொகையை செலுத்த முடியாத கைதிகளுக்கு வழங்கப்பட்டு வரும் தண்டனையின் மீதி தொகை ரத்து செய்யப்பட்டதன் அடிப்படையில் 252 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.