Tamil News
Home செய்திகள் நல்லூரில் தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் விசேட சந்திப்பு

நல்லூரில் தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் விசேட சந்திப்பு

தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் சமகால நிலைமை தொடர்பாக யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி சந்திப்பொன்றை மேற்கொண்டனர். 

நல்லூரில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் நேற்று (டிச. 24) மாலை ஒன்றுகூடிய தமிழ் கட்சிகளின் தலைவர்கள் 2 மணிநேரம் வரை கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட்த் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா, தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது ஜனாதிபதியுடனான சந்திப்பு, தேர்தல், ஜெனீவா போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

Exit mobile version