எமக்கான தீர்வை சர்வதேசமே பெற்றுத்தர வேண்டும்
சிறீலங்கா அரச படைகளால் கைது செய்யப் பட்டும், கடத்தப் பட்டும், காணாமல் ஆக் கப்பட்டும் உள்ள தமது உறவு களுக்காக வவுனியாவில் போராட்டப் பந்தல் அமைத்து, இரவு – பகலாக பல எதிர் பார்ப்புகளுடன் 1600 நாட்களைக் கடந்து அவர்களின் உறவினர்கள் போராடிக் கொண்டி ருக்கிறார்கள்.
கொட்டும் மழையிலும், அனல் வெயிலிலும் மகளே…!, மகனே…! என்று கதறி அழைக்கும் அந்த உறவுகளின் குரல்கள் எவர் செவி களிலும் இது வரையில் விழவில் லைப் போலும்.
“கடத்திச் செல்லப் பட்ட மகள் எங்கே? இந்த தேசத்தில் எங்கே இருக்கிறாள்? மகளே! நலமாய் இருக்கிறாயா? நீ எப்படி யம்மா இருக்கிறாய்? உன்னை தேடிய லையும் என் குரல் உன்னை எட்ட வில்லையா? வந்து விடு மகளே..” என நா வரண்டு வார்த்தைகள் தடுமாறி விக்கி விக்கி வந்த அந்த தளர்ந்து போன கதறல், வீதியில் சென்று கொண்டிருந்த என்னை அவர் அருகில் அழைத்துச் சென்றது.
அந்தத் தாயின் அருகிலே சென்று பேச்சுக் கொடுத்த போது,
தன் பிள்ளை கடத்திச் செல்லப்பட்ட பின் மகளின் புகைப் படத்தினைப் பத்திரிகை யில் பார்த்ததாக அவர் கூறுகின்றார். ஆனால் இன்னமும் தன் பிள்ளை தன்னிடம் வரவில்லை என்றும் அவர் கலங்குகின்றார்.
மேலும் அந்தத் தாய் தன் தற்போதைய நிலையை என்னிடம் பகிர்ந்து கொண்டார். “நான் உங்கள் அனைவருக்கும் கூறுகின்றேன் சற்றுக் கேளு ங்கள். இந்தச் செய்தியை உலகறியச் செய்யுங்கள். நீதி சாகாதல்லவா?”
காணாமல் ஆக்கப்பட்ட மகளின் தாய் மேலும் கூறுகின்றார்….,
“என்ரை பெயர் காசிப்பிள்ளை ஜெயவனிதா, பெரியமடு – நைனா மடுவில் தற்போது வசித்து வருகின்றேன். என்ரை மகள் காசிப்பிள்ளை ஜெரோமி. இவரே இலங்கை அரச படைகளால் என் கண் முன்னே இழுத்துச் செல்லப்பட்டு, காணாமல் ஆக்கப் பட்டுள்ளார்.
இதன் போது பிள்ளைகளுடன் இரட்டைவாய்க் கால் இராணுவச் சோதனைச் சாவடிக்கு அருகாமையில் வந்து கொண்டிருக்கும் போது, திடீரென ஓர் இராணுவ வாகனம் வந்து அப்பகுதியில் வந்தவர்களை தம் வாகனத்தில் ஏற்றி, வேறு ஒரு இடத்தில் கொண்டு போய் நிறுத்தினார்கள்.
வாகனத்தில் இருந்தவர்கள் எல்லோரையும் அந்த இடத்தில் இறக்கி விட்டு 16 வயதான என் மூத்த மகள் ஜெரோமியை இராணுவத்தினர் வலுக் கட்டாயமாக வாகனத்தில் இழுத்து ஏற்றினார்கள். அப்பொழுது என் பிள்ளையை விடாமல், அந்த வாகனத்தில் நானும் ஏறி வருகிறேன் என கதறினேன். பின் என்னையும், மகளையும் வாகனத்தில் கொண்டு போனார்கள்.
பின்னர் இராணுவத்தினர் அடித்த காயங்க ளுடன் நானும், எனது கணவனும் பிள்ளையை பிரிந்த கவலையோடு மற்றப் பிள்ளை களையும் பாதுகாக்க வேண்டும் என்று கருதி வவுனியா செட்டி குளத்தில் அமைக்கப் பட்ட இராமநாதன் முகாமிற்கு வந்து சேர்ந்தோம். பின்னர் பிள்ளையைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்க வில்லை. 2009ஆம் ஆண்டு மார்கழி மாதம் முகாமில் இருந்து வெளியேறி, இன்று வவுனியா பெரியமடு, நைனா மடுவில் வசித்து வருகின்றோம்.
இந்த நிலையில், பிள்ளையை ஒவ்வொரு இடமாகத் தேடி அலைந்து கொண்டிருக்கும் போது, 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி, ஜனாதிபதி தேர்தல் நடை பெற்ற நேரம், ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேனவின் பிரச்சார மொன்றில் மைத்திரிபால சிறிசேனவுடன் எனது மகள் பாடசாலைச் சீருடையில் இருக்கும் புகைப் படம் ஒன்று நூறு நாட்களில் புதிய நாடு என்ற ஒரு பத்திரிகையில், வெளியாகி யிருந்தது.
அதனைப் பார்த்ததும் என் மகள் என உறுதி செய்து, என் மகளை மீட்டு எம்மிடம் கொண்டு வர வேண்டும் எனும் நோக்கில் எவ்வளவு போராடியும் என் மகளை மீட்க முடிய வில்லை.
என் மகளை மீட்பதற்கு காவல் துறை, மனித உரிமைகள் ஆணைக்குழு என எல்லா இடங்களிலும் முறைப்பாடு செய்தும், என் மகளை என்னால் மீட்டெடுக்க முடிய வில்லை. பதினாறு வயதில் காணாமல் போன என்ரை பிள்ளை, இப்போ எங்கே? எப்படி? இருக்கிறாள் எண்டு தெரிய வில்லை. என் பிள்ளை இருக்கிறாள் என தெரிஞ்சும் என்ரை பிள்ளைய என்னால் மீட்க முடிய வில்லை.
வலிந்து கடத்திச் செல்லப் பட்டு, காணாமல் ஆக்கப் பட்டவர்களின் நிலை என்ன? அவர்கள் எங்கே? அவர்களை மீட்டுக் கொடுங்கள். அவர்கள் குற்றம் இழைக்க வில்லை, குற்றமிழைத்த கொலைக் குற்றவாளிகளை இலங்கை அரசு நிபந்தனை இன்றி விடுவிக்கின்றது. ஆனால் தவறேதும் செய்யாமல், வலிந்து கடத்திச் செல்லப் பட்டு, காணாமல் ஆக்கப் பட்டிருக்கின் றார்கள் எம் தமிழ் உறவுகள். இவர்களுக்கான நீதி எங்கே?
சர்வதேசமே! சிறீலங்கா அரசாங்கத்திடம் எவ்வளவு கோரிக்கைகள் வைத்தும் நீதி கிடைக்க வில்லை என்பதனால் தான் சர்வ தேசமே தமக்கு தீர்வினைப் பெற்று தரும் என்ற நம்பிக்கையில் இந்த உறவுகள் நாட்களைக் கடந்தும் போராடிக் கொண்டிருக் கின்றார்கள்.
தாய் பெயர் : காசிப்பிள்ளை ஜெயவனிதா
மகன் பெயர்: காசிப்பிள்ளை ஜெரோமி (கைது : 2009.03.04)
இடம் – பெரியமடு – நைனாமடு
- சிதைக்கப்படும் தமிழர் தாயகமும் அச்சுறுத்தப்படும் தமிழ்த்தேசியமும்
- இருபத்து ஆறு ஆண்டுகள் கடந்தும், நீதி கிடைக்காத இனப்படுகொலை