ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள்-தமிழர் தாயக சங்கம்

தமிழர் தாயக சங்கம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்கான திறவுகோல் ரோம் சாசனத்தில் தான் உள்ளது.  எனவே தவிர, ஓ எம் பி இடத்தில் அல்ல என்று வவுனியாவில் கடந்த 1678 வது நாளாக போராட்டம் மேற்கொள்ளும் தமிழர்  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தமிழர் தாயக சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினரால் வவுனியாவில் இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு  கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,

”முதலில் சுமந்திரன் மற்றும் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டத்தில் உறுப்பினராக்க வேண்டும். பின்னர் போர்க்குற்றம் செய்ததாக நினைக்கும் எவர் மீதும் சுமந்திரன் வழக்கு பதிவு செய்யலாம்.

ரோம் சட்டத்தில் இலங்கை கையெழுத்திட்ட பிறகு, எங்கள் 146,000 தமிழர்களைக் கொன்றவர்கள் மீது வழக்குத் தொடுப்பதற்கு நாம் தயாராகலாம்.

மேலும், 90,000 விதவைகளையும் , 50,000 ஆதரவற்றோர் மற்றும்  25,000 க்கும் மேற்பட்ட தமிழர்களை காணாமல் செய்தவர்களுக்கும்  வழக்கை நாங்கள் தாக்கல் செய்வோம்.

தமிழர்களையும்  விசாரிக்க விரும்புவதாக சுமந்திரன் கூறுகிறார். நீதி பெறுவதற்கான சிறந்த வழி அவர்கள் அனைவரையும் விசாரிப்பது என்றும் கூறுகிறார். அனைத்து தரப்பினரையும் விசாரனைக்கு கொண்டு வருவதன் மூலம் சுமந்திரன் தனது  வழக்கு வலுப்பெறும் என்று கூறுகிறார்.

அவர் இங்கே என்ன பேசுகிறார் என்பது எங்களுக்குத் தெரியவில்லை.ஆனால் காணாமல் ஆக்கப்பட்ட  தமிழ் குழந்தைகளின் தாய்மார்களான நாங்கள் கூறுகிறோம், சுமந்திரன் மற்றும் அவரது நண்பர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர், இலங்கையை ரோம் சட்டத்தில் கையெழுத்திடச் செய்யுமாறு வலியுறுத்துகிறோம். இந்த ரோம் சட்டத்தில் கையெழுத்திடாமல், நீதி வழங்கப்படாத நிலமையே உள்ளது.

எனவே, நாங்கள் இந்த விடயத்தில் சுமந்திரனை  மழுப்ப வேண்டாம் என கேட்கிறோம், சில செயல்களைக் செய்து காட்டுங்கள், ரோம் சட்டத்தில் கையெழுத்திடுமாறு இலங்கையைக் கோர உங்களால் முடியாவிட்டால், தயவுசெய்து தமிழர்களை விட்டுவிட்டு உங்கள் வீட்டிற்கு திரும்புங்கள்.

நீங்கள் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை, நீங்கள் தமிழர் தரப்பை அழிக்கிறீர்கள். இது தமிழர்களுக்கான  நியாயம் இல்லை. சுதந்திரம் பெற்றதிலிருந்து தமிழர்கள் தங்கள் துன்பங்களுக்கு நீதியையும் பொறுப்பு கூறலையும் விரும்புகிறார்கள்.

நீங்கள் தமிழர்களின் எதிரிகள் போல் செயல்படுகிறீர்கள், எனவே உங்கள் நிலுவையில் உள்ள ராஜினாமா கடிதத்தை முடித்து எங்களை தனியாக விட்டுவிடுமாறு நாங்கள் கேட்கிறோம்.

நீங்கள் இப்பொழுது வெளியேறினால், நீங்கள் எங்களுக்கு  செய்த தீங்குகளை   கடவுள் மன்னிப்பார்” என்றனர்.

ilakku.org/ilakku-weekly-epaper-148-september-19-2021