Tamil News
Home செய்திகள் பரசிட்டமோல் மருத்துக்கு தட்டுப்பாடு-அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்

பரசிட்டமோல் மருத்துக்கு தட்டுப்பாடு-அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்

சில வைத்தியசாலைகளில் பரசிட்டமோல் மருந்துக்கு கூட கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அதன் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இதனை தெரிவித்துள்ளார்.

பொதுவாக இந்நாட்டில் நோயாளிகளின் சிகிச்சைக்காக 1300 க்கும் மேற்பட்ட வகையான மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன, அவற்றில் 383 வகையான மருந்துகள் அத்தியாவசிய மருந்துகளாகக் கருதப்படுகின்றன.

நாட்டில் தற்போது சுமார் 160 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version