இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன் பாரப்படுத்தும் முயற்சிகளிற்கு பாதுகாப்பு சபை ஆதரவளிக்காது – பிரித்தானியா

பாதுகாப்பு சபை ஆதரவளிக்காது

பிரித்தானியாவின் பொதுநலவாய வெளிவிவகார சர்வதேச அபிவிருத்தி அமைச்சிற்கு இலங்கை மனித உரிமை முன்னுரிமை நாடுகளில் ஒன்று என தெரிவித்துள்ள அந்நாட்டமைச்சர் விக்கிபோர்ட் இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன் பாரப்படுத்தும் முயற்சிக்கு ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் ஆதரவு கிடைக்காது என மதிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொழில்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் மோர்கன் பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் பிரிட்டனின் பொதுநலவாய வெளிவிவகார சர்வதேச அபிவிருத்தி இணையமைச்சர் விக்கிபோர்ட் இதனை தெரிவித்துள்ளார்.

Tamil News