Tamil News
Home செய்திகள் மருத்துவர் த.சத்தியமூர்த்தி மீண்டும் தனது கடமைகளைப் பொறுப்பேற்கிறார்

மருத்துவர் த.சத்தியமூர்த்தி மீண்டும் தனது கடமைகளைப் பொறுப்பேற்கிறார்

சத்தியமூர்த்தி தனது கடமைகளைப் பொறுப் பேற்கிறார்: நாட்டில் நிலவும் கொரோனா பேரிடரினை கருத்திற் கொண்டு மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் பதவியை  இன்று(03)  மீண்டும் பொறுப் பேற்கின்றார்.

கடந்த பெப்ரவரி மாதம் பிரித்தானியாவில் மேற்படிப்புக்காக  சென்றிருந்த வேளை அவர் தனது பொறுப்பை தற்காலிகமாக பதில் பணிப்பாளர் மருத்துவர் S.ஸ்ரீபவானந்தராஜாவிடம் ஒப்படைத்திருந்தார்.

எனினும் தற்போது விடுமுறையில் நாடு திரும்பிய மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தியை பணிப்பாளர் பொறுப்பை ஏற்க சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டதற்கு அமைவாக அவர் தனது மேற்படிப்பை சில காலம் ஒத்தி வைத்து  இன்று 03.09.21 காலை 8 மணிக்கு தனது கடமைகளைப் பொறுப்பேற்க்கவுள்ளார்.

Exit mobile version