Home செய்திகள் சமதா கட்சி கேரள முதல்வருக்கிடையில் சந்திப்பு : ஈழத் தமிழர்களின் துயரங்களுக்கு நிரந்தர தீர்வு காண...

சமதா கட்சி கேரள முதல்வருக்கிடையில் சந்திப்பு : ஈழத் தமிழர்களின் துயரங்களுக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தல்

236608171 229045855893009 2953429812467352202 n சமதா கட்சி கேரள முதல்வருக்கிடையில் சந்திப்பு : ஈழத் தமிழர்களின் துயரங்களுக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தல்

சமதா கட்சி மற்றும் ஈழத் தமிழர் நட்புறவு மையம் இணைந்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களை சந்தித்தனர். அவரிடம் இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்களின் துயரங்களுக்கு நிரந்தர தீர்வு அமைய 3 கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

1) தமிழர்களின் தாயகமான தமிழீழம் அமைய வழி காண வேண்டும்.

2) ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை வன்முறைக்கு ஈடுசெய் நீதியைத் தேடுவது.

3) ஈழத் தமிழர்களின் தன்முடிபுரிமை கோரிக்கையை ஆதரிப்பது. ஆகிய 3 கோரிக்கைகளையும் மத்திய அரசிடம் வலியுறுத்தவேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. அனைத்தையும் கேட்டுக் கொண்ட முதலமைச்சர் பிரனாயி விஜயன் அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களையும் சந்தித்து ஆதரவு திரட்ட இருப்பதாகவும், அதற்கான பணிகள் நடைபெறுவதாகவும், இதன் முதற் கட்டமாக கேரள முதலமைச்சரை சந்தித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் சமதா கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் என். ஏ. கோன், சமதா கட்சியின் தமிழ் நாடு மாநிலப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் மணிவண்ணன், ஈழத்தமிழர் நட்புறவு மைய பிரதிநிதிகள் பேராசிரியர் ராமு.மணிவண்ணன் மற்றும் பொன்னம்பலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version