Tamil News
Home செய்திகள் “இலங்கையில் சர்வதேச பிரச்சினையாக ரஷ்ய விமான பிரச்சினை மாற்றப்பட்டுள்ளது” – சஜித் பிரேமதாச

“இலங்கையில் சர்வதேச பிரச்சினையாக ரஷ்ய விமான பிரச்சினை மாற்றப்பட்டுள்ளது” – சஜித் பிரேமதாச

ரஷ்ய விமான பிரச்சினை

கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் உத்தரவின் படி   இலங்கையில் இருந்து வெளியேறத் தடை விதித்து, தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்யாவின் ஏரோபுளோட் விமானம் தொடர்பான பிரச்சினை சர்வதேச பிரச்சினையாக மாற்றப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ராஜதந்திர மட்டத்தில் தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய ரஷ்ய விமானம் தொடர்பான பிரச்சினை தற்போது பாரிய அளவில் உருவெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை இல்லாமலாக்கிக் கொள்ளவும் நாட்டின் தேயிலையை விற்பனை செய்துகொள்ள முடியாத நிலைக்குத் தள்ளவுமே அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன், இந்த அபாய நிலையைப் புரிந்துகொள்ள முடியாத நிலையில் ஜனாதிபதி அல்லது வெளியுறவு அமைச்சர் ஆகியோர் காணப்படுவது ஏன் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பியுள்ளார்.

Exit mobile version