Home உலகச் செய்திகள் ஸிப்போரிஷியா அணு மின் நிலையத்தை கைப்பற்றிய ரஷ்ய இராணுவம்

ஸிப்போரிஷியா அணு மின் நிலையத்தை கைப்பற்றிய ரஷ்ய இராணுவம்

அணு மின் நிலையத்தை கைப்பற்றிய  ரஷ்ய இராணுவம்

ஸிப்போரிஷியா அணு மின் நிலையத்தை கைப்பற்றிய ரஷ்ய இராணுவம் கைப்பற்றியதாக, உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“அணு உலையை இயக்கும் பணியாளர்கள் மின் அலகுகளின் நிலையை கண்காணித்து வருகின்றனர்” என்று உள்ளூர் அதிகாரி ஒருவர், சமூக ஊடகங்களில் தெரிவித்ததாக, ராய்ட்டர்ஸ் செய்தி முகமை மேற்கோள் காட்டியுள்ளது.

அணுமின் நிலைய பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும், மின் அலகுகளின் நிலையை கண்காணித்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் ஷெல் தாக்குதலுக்குப் பிறகு, ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுமின் நிலையமான ஸிப்போரிஷியா அணு மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. பின் அத் தீ அணைக்கப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version