இலங்கையில் அதிகரிக்கும் ஒமிக்ரோன் பிறழ்வால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது நான்காக உயர்வடைந்துள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் பிரிவின் பணிப்பாளரான கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
இன்று ஆய்வகத்தில் இருந்து நேர்மறை தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய எதிர்காலத்தில் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பொது மக்களை பூஸ்டர் டோஸை பெற்றுக்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.