எரிபொருளுக்கு தொடரும் தட்டுப்பாடு: இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுபாட்டு நிலை இன்னும் சீராகாத நிலையில் யாழ்ப்பாணம், பருத்தித்துறை பிரதேசத்தில் இன்றைய தினம் (02) எரிபொருள் விநியோகம் இடம்பெற்றிருக்கவில்லை.
பருத்தித்துறை பிரதேசத்தில் உள்ள மூன்று எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் இன்றைய தினம் எந்தவித எரிபொருள் விநியோகமும் இடம்பெறவில்லை.
எரிபொருள் கையிருப்பு இல்லாத காரணத்தினால் எரிபொருள் விநியோகம் இடம்பெறவில்லை என அறிவிப்பு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இதனால் பருத்தித்துறை நகர் மற்றும் புறநகர் பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.