Tamil News
Home செய்திகள் மீண்டும் கோவிட் பரவல்: சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தல்

மீண்டும் கோவிட் பரவல்: சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தல்

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் COVID-19 நோய்த்தொற்றுகள் அதிகரித்துள்ளதை அடுத்து, இலங்கையில் உள்ள சுகாதார அமைச்சு பொது மக்களை சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

“தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை சிறிதளவு அதிகரித்துள்ள போதிலும், பாரியவில் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதால், நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரியவில்லை. இருப்பினும், கொரோனா வைரஸால் மக்கள் பாதிக்கப்பட முடியாது என்று கூறுவதற்கு இடமில்லை என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் டொக்டர் சமிதா கினிகே தெரிவித்துள்ளார்.

தொற்றுநோயியல் பிரிவின் புள்ளிவிவரங்களின்படி, கடந்த 3 நாட்களில் சராசரியாக 19 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனவே முகக்கவசம் அணிதல் உட்பட கோவிட் பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என சுகாதார தரப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளன.

Exit mobile version