ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருவரும் நாட்டில் இல்லாத போது முழுப் பொறுப்புகளும் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வெளிநாட்டுக்கு செல்வதற்கு முன்னர் நிதியமைச்சர் மற்றும் அமைச்சரவையின் முழுப் பொறுப் பையும் ஏற்றுக்கொள்ளுமாறு கூறிய தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, நிதியமைச்சர் உள்ளிட்ட அமைச்சரவையினால் நாட்டின் ஆட்சி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.