Home செய்திகள் மன்னாரில் அவுஸ்ரேலிய நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வு மற்றும் மணல் ஆய்வு நடவடிக்கைகளை இடை நிறுத்த...

மன்னாரில் அவுஸ்ரேலிய நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வு மற்றும் மணல் ஆய்வு நடவடிக்கைகளை இடை நிறுத்த தீர்மானம்

அவுஸ்ரேலிய நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வு

அவுஸ்ரேலிய நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வு: ஐந்து வருடங்களுக்கு மேலாக மாவட்ட ரீதியாக அனுமதி பெற்றுக் கொள்ளப்படாது ஆய்வு என்ற ரீதியில் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த கனிய மண் அகழ்வு மற்றும் காற்றாலை மின் சக்தி திட்டத்தின் விரிவுபடுத்தலை உடனடியாக நிறுத்துவததென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வருடத்துக்கான முதலாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மன்னார் நகர் பிரதேச செயலாளர் ம.பிரதீப் நெறிப்படுத்தலில்  பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் தலைமையில் மன்னார் நகர மண்டபத்தில் நேற்று  இடம் பெற்றது.

குறித்த கூட்டத்தில், மன்னார் மாவட்டத்தின் கரையோர பகுதிகளில் ஐந்து வருடங்களுக்கு மேலாக கனிய மண் ஆய்வு என்ற போர்வையில் பேசாலை, நடுக்குடாஇ கட்டுக்காரன் குடியிருப்பு போன்ற பகுதிகளில் நிலத்தின் ஆழத்திற்கு துளையிட்டு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்ற ஆய்வு மற்றும் அகழ்வை உடனடியாக நிறுத்திவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதே நேரம், மன்னாரில் கடந்த வருடம் அமைக்கப்பட்ட காற்றாலை மின் உற்பத்தி செயற்திட்டத்தையும் நிறுத்துவதற்கு அபிவிருத்தி குழுவால் தீர்மானிக்கப்பட்டது.

குறித்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில்  பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன்வி,னோ நோகராதலிங்கம், நகர பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள், அரச பதவி நிலை உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Exit mobile version