சர்வதேச மகளிர் நாளை கறுப்பு நாளாக அனுஸ்டிக்க கோரிக்கை

கறுப்பு நாளாக அனுஸ்டிக்க கோரிக்கை 

சர்வதேச மகளிர் தினத்தினை கறுப்பு தினமாக பெண்கள் அனுஸ்டிக்க வேண்டும் என உள்ளுராட்சிமன்ற பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ளுராட்சிமன்ற பெண்கள் சிலர் இன்று காந்தி பூங்காவில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பெண்கள் எதிர்கொண்டுள பொருளாதார நெருக்கடியை வெளிப்படுத்தும் வகையில் கஸ் சிலின்டரை வைத்துக்கொண்டு இந்த போராட்டத்தில் பெண்கள் ஈடுபட்டனர்.

கறுப்பு நாளாக அனுஸ்டிக்க கோரிக்கை 

மட்டக்களப்பு மாநகரசபை, ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை,கோறளைப்பற்று பிரதேசசபையின் பெண் உறுப்பினர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள விலைவாசி காரணமாகவும் பெற்றோல்,டிசல் தட்டுப்பாடுகள் காரணமாகவும் பெண்கள் பெரும் சிரமங்களையும் கஸ்டங்களையும் எதிர்நோக்கிவருவதாகவும் இதன் காரணமாக குடும்ப வன்முறைகளும் அதிகரித்துவருவதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

விலையினையேற்றி வன்முறையினை தூண்டாதே,விலைவாசியால் திண்டாடும் பெண்கள்,அரசே பெண்களின் நிலைக்கு பதில் சொல் போன்ற வாசகங்களை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பெண்கள் எதிர்நோக்கும் நெருக்கடியை வெளிப்படுத்தும் வகையில் அனைத்து பெண்களும் இந்த மகளிர் தினத்தினை கறுப்பு நாளாக அனுஸ்டிக்க கோரிக்கை  விடுக்கப்பட்டது.

Tamil News