Tamil News
Home செய்திகள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு அவுஸ்திரேலியாவிடம் கோரிக்கை

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு அவுஸ்திரேலியாவிடம் கோரிக்கை

இலங்கையில் அவுஸ்திரேலிய நிறுவனங்களின் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அவுஸ்திரேலிய  துாதுவர் போல் ஸ்டீபன்ஸிடம்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இருவருக்கும் இடையில் நேற்று முன்தினம் சந்திப்பு இடம்பெற்றதாக வெளிவிவகார அமைச்சு நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, உள்நாட்டு சவால்களை எதிர்கொள்வதற்காக அண்மையில் அவுஸ்திரேலியாவினால் வழங்கப்பட்ட உடனடியான மனிதாபிமான உதவிகளுக்கு வெளிவிவகார அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

வலுசக்தி மற்றும் கல்வித்துறையில் முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

அதேநேரம், பல்தரப்பு மட்டத்தில் பரஸ்பர நலன்கள் உள்ளிட்ட பல்வேறு இருதரப்பு விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Exit mobile version