இறுதிப் போரில் விடுதலைப் புலிகளின் கப்பல்களை அழிக்க இந்தியா நேரடியாக உதவியதாக தகவல்!

கடந்த 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின் போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் கப்பல்களை அழிக்க இந்திய கடற்படை கொழும்புக்கு நேரடியாக உதவியதாக இலங்கையின் முன்னாள் மூத்த கடற்படை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு பாதுகாப்பு மண்டலத்தின் தளபதியாகவும், கடற்படையின் உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளருமாக பணியாற்றிய டி.கே.பி.தசநாயக்க, சமூக ஊடக நேர்காணலில், இதனை குறிப்பிட்டுள்ளார்.

மோதல்களின் போது தமிழீழ விடுதலைப் புலிகளிடம் 26 கப்பல்கள் இருந்தபோதும், அதில் 12 கப்பல்கள், இந்திய கடற்படையின் உதவியுடன் அழிக்கப்பட்டன என்றும் டி.கே.பி.தசநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2008 – 2009ஆம் ஆண்டு காலப்பகுதயில் கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் டி.கே.பி.தசநாயக்கவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.