Home செய்திகள் தேர்தல் முறை மறுசீரமைப்பு குறித்து 115 முன்மொழிவுகள்

தேர்தல் முறை மறுசீரமைப்பு குறித்து 115 முன்மொழிவுகள்

parliment 600 தேர்தல் முறை மறுசீரமைப்பு குறித்து 115 முன்மொழிவுகள்

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையில் மறுசீரமைப்புகளை மேற்கொள் வதற்காக நியமிக்கப் பட்டுள்ள பாராளு மன்ற விசேட குழுவுக்கு 115 முன் மொழிவுகள் மற்றும் யோசனைகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இந்தத் தகவலை அக் குழுவின் தலைவரும் சபை முதல்வரும் வெளி நாட்டு அலுவல்கள் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன பாராளு மன்றத்தில் நேற்று இடம் பெற்ற அந்தக் குழுக் கூட்டத்தின் போது தெரிவித்தார்.

ஏற்றுக் கொள்ளப்பட்ட 7 அரசியல் கட்சிகளின் மூலம் யோசனைகள் முன்வைக்கப் பட்டுள்ளன எனவும், எதிர்வரும் 15 ஆம் திகதி வரை அந்தக் கட்சிகளுக்கு யோசனைகளை சமர்ப்பிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அந்த யோசனைகளை sec.pscelectionreforms2021@parliament.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது செயலாளர், பாராளுமன்ற விசேட குழு, இலங்கை பாராளு மன்றம், ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே எனும் முகவரிக்கோ அனுப்பி வைக்க முடியும். தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையில் மறு சீரமைப்புகளை மேற் கொள்வது தொடர்பில் 2021 ஜூன் 30 ஆம் திகதி வரை கிடைக்கப் பெற்ற பொது மக்களின் யோசனைகளை சபைக்கு சமர்ப்பித்தல் மற்றும் அந்த யோசனைகள் பற்றிய சாராம்சம் தொடர்பில் நேற்று இடம் பெற்ற கூட்டத்தில் அவதானம் செலுத்தப் பட்டது.

உத்தேச மறு சீரமைப்புகள் தொடர்பில் நிபுணர்கள் குழு ஒன்றை நியமிப்பது தொடர்பிலும் இதன் போது அவதானம் செலுத்தப் பட்டது. இந்தக் குழுக் கூட்டத்தில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளு மன்ற உறுப்பினர்களான அநுரகுமார திஸாநாயக்க, கபீர் ஹஷீம், ரஞ்சித் மத்தும பண்டார, எம்.ஏ.சுமந்திரன், மதுர விதானகே மற்றும் சாகர காரியவசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 137

Exit mobile version