குற்றவியல் நீதிமன்றுக்கு பாரப்படுத்துங்கள்; தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஐ.நா.வுக்கு கடிதம்

குற்றவியல் நீதிமன்றுக்கு பாரப்படுத்துங்கள்“ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46/1 தீர்மானத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது. குற்றவியல் நீதிமன்றுக்கு பாரப்படுத்துங்கள், எனவே இந்த விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டும்” என தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 13 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமது கோரிக்கைகள் அடங்கிய கடிதமொன்றை நேற்று அனுப்பிவைத்துள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46/1 தீர்மானத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது, எனவே பொறுப்புக்கூறல் விடயத்தை மனித உரிமைகள் பேரவையில் வைத்துக்கொண்டிருக்கும் வரையில் மக்களுக்கு கிடைக்கவேண்டிய நீதியும் அரசியல் தீர்வும் தாமதித்துக் கொண்டே இருக்கும் என இந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

எனவே இந்த விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்தக் கடிதம் மூலம் வலிறுத்தியுள்ளது.

கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர். கட்சி கடந்த ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் அனுப்பிய கடிதங்களும் இத்துடன் இணைத்து அனுப்பப்பட்டுள்ளன.

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கையொப்பமிட்ட கடிதம் ஒன்று ஜெனீவாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனைவிட இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரு பங்காளிக்கட்சிகள் அடங்கலாக ஐந்து கட்சிகள் இணைந்து, மற்றுமொரு கடிதத்தை ஏற்கனவே அனுப்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021